என்னை புலம்ப வைத்தாய் ?

அன்பே உன்னை
நிலையாக உள்ள
வானமாகவே
நான் நினைத்து இருந்தேன்
சில கணங்களுக்கு மாத்திரம்
விழிகளுக்கு இன்பம் அளிக்கும்
வானவில்லாய் அல்ல....

அன்று என் இதய வாயிலை
திறந்து கொண்டு - நீ
வந்த பொழுது அசைக்க
முடியாத இன்பமாக இருந்தது
அதை ஒரே நொடியில் மாற்றி
இன்று எதட்காக பிறந்தாய்?
ஏன் என்னை பிரிந்தாய்?
என்று புலம்ப வைத்து விட்டாய்...

எழுதியது பிழை என்று
பக்கங்களை கிழித்து
எறிந்து விட முடியும்
அதே போல்
உன்னை பிரிந்தேன் என்று
இதயத்தை கழற்றி
எறிந்து விட முடியுமா?

உன்னோடு பேச முடியாத
இந்த நாட்களையே
என்னால் தாங்கிக் கொள்ள
முடியவில்லையே...

நிரந்தரமாக உன்னை மறந்து
பிரிந்து என்னால்
வாழ முடியும் என எப்படி
நீ நினைத்து இப்படி
என்னை புலம்ப வைத்தாய் ?

எழுதியவர் : கார்த்திக் . பெ (2-Jun-10, 1:26 pm)
பார்வை : 1046

மேலே