வருத்தம் எதற்கு விட்டு விடு
கவலைகள் உனக்கிருந்தால் - மனிதா
கடவுளுக்கும் கொஞ்சம் கொடு...!
கனவுகள் கலைந்திருந்தால் - மனிதா
கதவுகளை மனதில் திறந்து விடு...!
முடிவுகள் தோல்வியென்றால் - மனிதா
முடியும் என நம்பி எழு...!
கரங்கள் சுமையென்றால் - மனிதா
சிறகாய் மாற்றி விடு...!
வரங்கள் வருமென்றால் - மனிதா
வருத்தம் எதற்கு விட்டு விடு...!