வருத்தம் எதற்கு விட்டு விடு

கவலைகள் உனக்கிருந்தால் - மனிதா
கடவுளுக்கும் கொஞ்சம் கொடு...!

கனவுகள் கலைந்திருந்தால் - மனிதா
கதவுகளை மனதில் திறந்து விடு...!

முடிவுகள் தோல்வியென்றால் - மனிதா
முடியும் என நம்பி எழு...!

கரங்கள் சுமையென்றால் - மனிதா
சிறகாய் மாற்றி விடு...!

வரங்கள் வருமென்றால் - மனிதா
வருத்தம் எதற்கு விட்டு விடு...!

எழுதியவர் : செ.பா. சிவராசன் (22-May-14, 1:59 pm)
பார்வை : 124

மேலே