விதியின் விளையாட்டு30

ஷிவானியின் இந்த நிலையை பார்த்து அனைவரும் கதறி அழுதனர்..........

எப்படி என் மகளுக்கு இப்படி ஆனது என்ன ஆச்சி என்று துடித்தார் ஷிவானியின் தாயார்...?

ரிஷானியால் எதுவும் பேச முடியாமல் அழுது கொண்டிருந்தாள் ஏனென்றால் மருத்துவரும் கடவுள் மேல் நம்பிக்கை வையுங்கள் என்று சொல்லிவிட்டு அவரால் இயன்ற அளவு முயற்சி செய்து கொண்டிருந்தார்.......!

செல்போனில் பேசிக்கொண்டிருந்தவள் திடீரென மயங்கி விழுந்தாள் பக்கத்தில் போய் என்ன காரணம் என்று யோசிக்கிறதுக்குள்ளால இரத்தம் இரத்தமாக வாந்தி எடுத்திருந்தாள் உடனே மருத்துவமனைக்கு கொண்டு வந்தோம் என்று சொல்லி கொண்டிருக்கும் போதே அழுதாள் மனோஜின் அம்மா??????

ஷிவானியின் அப்பா மட்டும் மௌனமாக எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தார்.

அருகில் சென்ற மனைவியை பார்த்து நீ இங்க இருந்து பார்த்துக்க நான் நம்ம ஜோசியர பார்த்துட்டு வருகிறேன் என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினார்...........!

அவரையே வெறித்த படி பார்த்தாள் அவள்......

ஷிவானியை உள்ளே சென்று பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை அடிக்கடி கதவு வழியாக எட்டி பார்த்து விட்டு வந்து அமர்ந்தாள் ரிஷானி.....!

மதனுக்கு மெசேஜ் வழி தகவலை கொடுத்தாள் ரிஷானி.

ஜோசியர்ரை பார்க்க சென்ற ஷிவானியின் அப்பா அவரை பார்த்தது ஓடி போய் அவரது காலில் விழுந்தார்....

அதற்குள் அவருக்கு ஒரு அழைப்பு வந்தது எடுத்து பேசியவருக்கு அதிர்ச்சி காரணம் ஷிவானி மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறாள் உடனே உங்களை பார்க்க வேண்டும் என்கிறாள் என்று சொல்லி விட்டு வைத்தாள்...........!

மனைவியின் பேச்சை கேட்டவர் அப்படியே உறைந்து போனார்.....!

ஜோசியரையும் அழைத்து விட்டு மருத்துவமனைக்கு சென்றார்.........


விதி தொடரும்.....

எழுதியவர் : ப்ரியா (24-May-14, 1:43 pm)
பார்வை : 339

மேலே