அன்றும் இன்றும்

எழுத்தையும் கருத்தையும்
எண்ணியே விடிந்தன பொழுதுகள்
அன்று...

என்ன சமைப்பது என்று
எண்ணியே பொழுதுகள் விடிகிறது
இன்று...

அலுவல் பணி மட்டும் கூட
அலுப்பாய் தெரிந்தன அன்று..

அலுவலோடும் அவனின்
அன்பிற்குள்
அடங்கி கிடக்கிறேன் இன்று

ஞாயிற்று கிழமைகளில்
உறங்குவது மட்டுமே
வேலை அன்று
சுத்தம் செய்து
ஒதுங்கவைப்பதிலேயே
ஒதுங்கி போகிறது தூக்கம் இன்று.

அன்று நன்று
இன்றோ சில்வண்டு
நாளையோ சிரிக்கிறது
எனை கண்டு...

-priya

எழுதியவர் : PRIYA (25-May-14, 4:56 pm)
Tanglish : anrum intrum
பார்வை : 93

மேலே