விதியின் விளையாட்டு37

உமா தன்னை திருமணம் செய்யாவிட்டால் தன வாழ்வை முடித்துக்கொள்வேன் என்றதும் மதனால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை உமாவும் நல்ல பெண்தான் தன மேல் அளவு கடந்த அன்பு வைத்திருப்பதை அவனால் புரிய முடிந்தது எனவே சரி உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று தனது சம்மதத்தை தெரிவித்தான்.

உடனே ரிஷானியை தொடர்பு கொண்டு இங்கு நடந்த விபரத்தை சொன்னான் அவள் அழ ஆரம்பித்தாள் என்ன மதன் இப்படி பண்றிங்க என்னை கொஞ்சமாவது நினைத்து பார்த்தீர்களா? என்று அழுகுரலில் கேட்டாள்????

மதன் பதில் கூறாமல் நின்றான்.
எப்பொழுது நீங்கள் என்னை நினைக்காமல் உங்கள் வாழ்க்கையை இன்னொரு பொண்ணுக்கும் கொடுக்க முன் வந்துவிட்டீர்களோ அப்பவே நம் காதல் இறந்து விட்டது இனிமேல் என்னிடம் பேசாதீர்கள் அவளை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கோவமாக பேசி விட்டு இணைப்பை துண்டித்தாள் ரிஷானி.....!


சிறிது நாட்கள் சென்றன............


மதனுக்கும் உமாவிற்கும் திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தான்......????.
_______________________________________________
இன்னொரு பக்கம் மனோஜ்க்கும் ரிஷானிக்கும் திருமணம் நடத்தி வைக்க இருவிட்டாரும் முடிவு செய்தனர்....!

ஆனால் அவர்கள் இருவருக்கும் இந்த விஷயம் தெரியாது .

இருவரின் ஜாதகமும் பார்க்கப்பட்டது எந்த குழப்பமும் இல்லை உடனே திருமணம் செய்யலாம் என ஜோசியர் சொன்னதும் சரி என்று இரு வீட்டாரும் மனோஜ் மற்றும் ரிஷானியிடம் இன்று பேசி ஒரு முடிவு எடுக்கலாம் என்ற முடிவுடன் இருந்தனர்...!

அப்பொழுது ரிஷானியின் அப்பா மனோஜ்க்கு போன் பண்ணி மாலையில் நீங்கள் வீட்டுக்கு வரும் போது ரிஷானியையும் உங்களுடன் அழைத்து வாருங்கள் நாங்கள் உங்கள் வீட்டில் தான் இருக்கிறோம் என்று சொன்னதும் சரி என்று சொல்லி விட்டு மனோஜ் ரிஷானியை அழைக்க சென்றான்........!



தொடரும்...

எழுதியவர் : ப்ரியா (21-Jun-14, 4:47 pm)
பார்வை : 268

மேலே