திருப்பிரமபுரம் - சம்பந்தர் தேவாரம் பாடல் 12

ஓரடியே பொருள் வேறுபட்டு நான்கு முறை மடித்து வந்து ஒரு பாடலாக அமைவது ஏகபாத அந்தாதி எனப்படும்.

ஏகம் – ஒன்று, பாதம் – அடி.

முதல் திருமுறையில் உள்ள 127 வது திருப்பிரமபுர பதிகம் திருஞானசம்பந்தரால் இயற்றப்பட்டது. இது ஏகபாத அமைப்புடையது.

கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை. பாடல் எண் : 12

குறிப்புரை :

மிகுதிப்பட்ட தோஷமாயுள்ள சுக்கில சுரோணிதமாகிய இருவகை நீரின்கண்ணே சிர முதலாகிய அவயவமாகத் தோன்றிப் பூமியில் செனித்துப் பரிணமித்துப் பின்பு தேய்ந்து மரிக்கின்ற சென்மத்தையும் பரிணமித்தல் - வேறுபடுதல்.

கீழ்ச் சொல்லிப்போந்த சென்மத்தையும் கழுவி மலத்திரயங்களையும் கழுவா நிற்கும்.

தனது பாதியாகிய திருவருளினாலே என்னை அகப்படுத்திக் கவளிகரித்துக் கொண்டு அந்த அருள்வழியாக என திடத்தில் இடையறாமல் வாழும் தன்னை எனக்குத் தந்த அடிமை குலையாமல் எக்கண்ணும் விட்டு விளங்கும் கர்த்தர்.

பாதி என்றது பதி எனக் குறுகி நின்றது.

மாயா மயக்கத்தில் மயங்கி பெற்ற முத்தி இரண்டும் தெரியாமல் திண்டாடப்பட்ட மலபோதர்க்கு அமுதம் போன்று அரிதாயுள்ளவனுமாய் விட்டு விளங்கப்படா நின்ற பொன்னுருவை உடையவனாய்ச் சிருஷ்டிக்குக் கர்த்தாவாகிய பிரமனது சிரக் கபாலத்திலே பிச்சைகொண்டு நுகரும் கருணை யாளனே!

திருக்கழுமலம் என்னும் மூவாப் பழங்கிழமைப் பன்னிரு பெயர் பெற்ற அனாதி மூலமாகிய பதியிடத்துக் கவுணிய கோத்திரத்திலே தோன்றப்பட்ட யான் நிவேதிக்கப்படும் காட்டாகிய இப்பாடலைக் கீழ்ச்சொன்ன வற்றிலும் மலத் திரயங்களிலும் அழுந்துகின்ற ஒருத்தராகிலும் பலராகிலும் உரை செய்வார் உயர்ந்தாரே ஆதலால் இப்பாடலை இடை விடாமல் உரைசெய்வீராக.

காட்டு என்பது கட்டு எனக் குறுகிநின்றது. (முடிவுற்றது)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Jul-14, 10:12 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 185

மேலே