கிளி சாமியார்
கிளி சாமியார்
-------------------
ராமு: டை சோமு , நேத்துக்கு முன்னால் கூட அந்த ஜோசியன்
கிளி வெச்சுதானே தொழில் நடத்திட்டு வந்தான்.இன்னிக்கு
என்னடான்னா ,அதே மரத்தடியிலே தானே கிளி மாதிரி
வேஷம் போட்டுகினு கிளிசமியாருனு வேற பேர மாத்தி
வெச்சிண்டு ஏதோ சாமியாரு மாதிரி உட்காந்து இருக்கான்
அவன சுத்தி ஏதோ மக்கள் கூட்டம் ,கிளி சாமியார் ஜெய்
என்று முழக்கம்; பெரிய பெரிய பித்தள தட்டு முழுக்க
நாடும் சிலரையும் குமியுதே , என்னடா இதெல்லாம்?
சோமு: ராமு ,கிளி ஜோசியத்துல ஒன்னும் பெரிசா குப்பகொட்டல
வேற எதாச்சும் பண்ணுவோம்னு போனவன் ஒரு கனவு
கண்டானாம் ; அதுல அவனே கிளி சாமியாராகி குறி சொல்ல
அவை பலிக்க பணம் கொழிக்க கிளி சாமின்னு அந்தஸ்து வேற
உயந்து போச்சாம் - இதெல்லாம் கனவில் ;மதாம் நாள் அவன்
நிஜமாகவே கிளி சாமி வேஷம் போட்டுக்கிட்டு ,மரத்தடியில்
குறி சொல்ல ஆரம்பிக்க , அதில் சில பலிக்க , ஒரே நாளிலே
கிளி சாமி ஆகி விட்டானாம்; இதை அவனே சொன்னான்.
ராமு ; தெரியாது; சொன்னாலும் இப்போ யாரும் நம்ப மாட்டார்கள்
இனி கிளி சாமி கிளி சாமிதான் ; மக்கள் கூட்டம் மொய்க்கும்
அவன் கேணியில் நீரூத்து.............. பணம் கொட்டுது.
சோமு ; கிளி பறந்து போச்சா? இல்ல அந்த ஜோசியன் உடலில் புகுந்து
குறி சொல்ல ஆரம்பிகிதோ தெரியல , ஆனா கிளி சாமியார்
என்கிற புது உருவில் நம்ம கிளி ஜோசியன் சக்கைபோடு
போடுகிறார் , ஹி ஹி
ராமு : ஜனங்க இப்படி நம்பிக்க வெச்சிருக்க இன்னும் பல சாமிகள்
உருவாகுவாங்க , ஏமாத்துவாங்க , பெரியவர்கள் என்று
சரித்திரமும் பேச வைப்பாங்க டோய்!
---------------------------------