தன்னால் தேடி வந்து சேரும்
ஆசை பட்டாலும்.... இல்லாவிட்டாலும்
நமக்கு சேர வேண்டியது அவசியம்
வந்து சேரும்
வேண்டாம் என்றாலும் நம் வாசல்
தேடி..... நமக்கென்று விதிக்கப்பட்டது
வேண்டும் என்றாலும் கிடைக்காது
நமக்கென்று விதிக்கபடாதது
இது தான் உண்மை, ஆயினும் நாம்
உழல்கிறோம் இரவும், பகலும்
ஆசை எண்ணங்களுடன் மனதில்
இழக்கிறோம் நிம்மதி அத்தகைய
தீவிர எண்ணங்களினால்....
அமைதியாக யோசித்து பார்த்தால்
அறிவோம், இத்தகைய நிம்மதி
குலைக்கும் எண்ணங்களினால் எந்த
பயனும் இல்லை என்பதை
மானிடரே, கொஞ்சம் ஆலோசனை
செய்யுங்கள்
ஆனால் அதற்காக, வரவேண்டியது
வரும் என்று கை கட்டி சோம்பேறி
தனமாக அமர்ந்து விடாதீர்கள்
தடுமாறாமல் உழையுங்கள், சேர
வேண்டியது, தன்னால் தேடி
வந்து சேரும்