நகைச்சுவை 006

கணவன் மனைவி இருவரும் ஏதோ பேசிக்கொண்டிருந்த பொழுது, மனைவி ஏதோ சொல்ல, கணவனுக்கு மனைவி மீது கோபம் வந்துவிட்டது. உடனே அவன் மனைவியைப் பார்த்து,

யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

என்று உரக்கக் கூவினான். தானும் சளைத்தவளல்ல என்பததைக் காட்ட மனைவி,

யாகாவாராயினும் பல்காக்க காவாக்கால்
சோகாப்பர் பல்லுடை பட்டு

என்றதும் கணவன் சிரிக்க, மனைவியும் சிரித்தாள்.

நீங்க மட்டும் ஏன் இன்னும் உம்ம்ன்னு இருக்கீங்க ?

எழுதியவர் : (27-Jul-14, 1:26 pm)
பார்வை : 337

மேலே