தாய்ப்பால் குடி
மண்ணில் தவழும் என் மடி மீனே
=மார்பின் தாய்ப்பால் நீ குடி தேனே
கண்ணின் மணியே நோய் எதிர்த் துன்னை
=காக்கும் சக்தி தாய்ப் பால் ஒன்றே
பெண்ணில் தோன்றும் மார் நோய் புற்று
==பிள்ளை அருந்தும் வாய் பால் கொண்டு
தன்னால் அழியும் வாய்ப்பே என்று உன்
==தாயென் மார்பில் பால் குடி நன்று.
மெய்யன் நடராஜ்