நெஞ்சினிலே Episode 01

நெஞ்சினிலே.......
( Still I Love You ) தொடர் கதை Episode 01

அந்த ஊரில் அழகிய பாடசாலை ஒன்று இருந்தது. அந்த பாடசாலை மிகவும் சிறந்து விளங்கியது. தரம் 1 இல் இருந்து உயர் தரம் வரை மாணவர்கள் கல்வி கற்று வந்தனர். இந்த பாடசாலையில் இருந்துதான் இந்த கதை ஆரம்பம் ஆனது..

ரவி அப்போது உயர் தர வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான் அவனும் அவனுடைய நண்பர்களும் எப்பொழுதும் கலகலப்பாக இருப்பார்கள். ரவி மாணவ தலைவனாக இருந்தான்.

ஒருநாள் ரவியும் அவனுடைய சில நண்பர்களும் ஒரு கட்டிடத்தின் மேல் மாடியில் நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது கீழே சில பெண் பிள்ளைகள் எல்லே விளையாடி கொண்டிருந்தனர். திடிரென பந்து கட்டிடத்தின் கூரையில் தங்கிவிட்டது. அப்பொழுது ஒரு சிறுவன் கல்லால் பந்துக்கு வீசினான் அந்த கல் ரவியின் முகத்திற்கு அருகாமையில் சென்றது. உடனே " டேய் எங்கட கல்ல வீசுற??" என்று ஏசினான். " அண்ணா இந்த அக்காதான் எடுத்து தர சொன்னங்க " என்று அருகில் இருந்த பெண்ணை காட்டினான். " ஹலோ மனுஷன் மேல இருக்கிறான் கண்ணா விளங்குது இல்ல " என்று திட்டினான். அவள் ஒன்னும் பேசாமல் அங்கிருந்து சென்று விட்டால்.

அவளுடைய பெயர் ராதா. எந்த ஆண்களிடமும் பேச மாட்டாள், எங்கு சென்றாலும் தலை குனிந்தபடிதான் செல்வாள் நல்ல மரியாதையான பிள்ளை, மிகவும் அழகானவள் நல்ல ஒழுக்கமும் நன்றாக படிப்பவள் கூட.

பாடசாலை முடிந்து எல்லோரும் சென்று கொண்டிருந்தனர் ராதாவும் சென்று கொண்டிருந்தாள் அப்போது ரவி அவளின் அருகே சென்றான் அவள் வழமை போல தலை குனிந்த படி சென்று கொண்டிருந்தாள் ரவி அவளை லேசாக உற்று பார்த்தான். அவள் அவனை கடைக்கண்ணால் பார்த்தாள். அவன் அப்படியே சிரித்து கொண்டு சென்று விட்டான். தொடரும்.......................

எழுதியவர் : முஹம்மத் றபீஸ் (3-Aug-14, 3:29 am)
சேர்த்தது : றபீஸ் முஹமட்
Tanglish : nenjinile
பார்வை : 447

மேலே