தினம் தினம்
நிலவும் வரவில்லை
நீயும் வரவில்லை
உயிரும் எனதில்லை
உலகம் தெரியவில்லை
நிழழும் அழுகிறது
நிமிடம் அறைகிறது
உதிரம் சிதறியது
உடலும் பிரிகிறது
இரவு முழுவதும் திரவம்
காணவில்லை எந்தன் திடம்
காலை எழுந்தவுடன் பிணம்
இந்த வலியுடன் தானே தினம்