என் அன்பே

விழியிரண்டில் காதல் தேக்கி
>>>>வெண்ணிலவாய் ஒளிர்ந்து நின்றாய் !
குழிவிழுந்த சிவந்த கன்னம்
>>>>குளிர்ந்திடவே சிரித்துச் சென்றாய் !
பொழிகின்ற மழையைப் போலே
>>>>புன்னகையால் சிலிர்க்க வைத்தாய் !
மொழிமறந்து தவித்த போது
>>>>முத்தான கவிதை தந்தாய் !



( அன்பு மகன் ...தளத்தின் குட்டி பாரதி எனக்கு அறுசீர் விருத்தம் எழுத கற்றுக் கொடுத்தான் .
நன்றி விவேக் பாரதி )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (27-Aug-14, 10:25 pm)
Tanglish : en annpae
பார்வை : 301

மேலே