கூட்டல் கழித்தல் பெருக்கல்

புத்தகம் கையில் எடுத்துப் புரட்டி
வித்தகம் செய்து களிக்காதே.- சித்தம்
தெளிய அறிவை பெருக்கு.

கற்றுத் தெளிந்து கரைகண்ட மேலோர்கள்
வெற்றி அடைதற்கு தம்வாழ்வில்- பெற்ற
துயர உயரம் அள.

எழுதி படிக்கின்ற எண்கணக்கு வாழ்வு
உழுத நிலம்போல் செழிக்க - பழுதற்று
உற்பத்தி செய்யும் விதைப்பு!

கூட்டிக் கழித்துப் பெருக்கித் தினசரி
ஏட்டில் கணிப்பதில் அல்லாமல் - ஈட்டும்
அனுபவமே வாழ்க்கை வகுப்பு

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (28-Aug-14, 2:57 am)
பார்வை : 149

மேலே