பேதைகள் அல்லார் புகாஅர் - ஆசாரக் கோவை 98
சூதர் கழகம் அரவம் அறாக்களம்
பேதைகள் அல்லார் புகாஅர் புகுபவேல்
ஏதம் பலவுந் தரும். 98 ஆசாரக் கோவை
பொருளுரை:
மூடரல்லாதவர் சூதாடும் இடத்திலும், பாம்புகள் நீங்காது வாழும்
இடத்திலும் நுழைய மாட்டார். நுழைவாரானால், அச்செய்கை பல
துன்பங்களையும் உண்டாக்கும்.
கருத்துரை:
சூதாடுமிடத்திலும் பாம்புகள் மிகுந்த இடத்திலும் அறிவுடையோர்
செல்ல மாட்டார்.
"அரவ மமர்களம்" என்றும் பாடம்,