பேதைகள் அல்லார் புகாஅர் - ஆசாரக் கோவை 98

சூதர் கழகம் அரவம் அறாக்களம்
பேதைகள் அல்லார் புகாஅர் புகுபவேல்
ஏதம் பலவுந் தரும். 98 ஆசாரக் கோவை

பொருளுரை:

மூடரல்லாதவர் சூதாடும் இடத்திலும், பாம்புகள் நீங்காது வாழும்
இடத்திலும் நுழைய மாட்டார். நுழைவாரானால், அச்செய்கை பல
துன்பங்களையும் உண்டாக்கும்.

கருத்துரை:

சூதாடுமிடத்திலும் பாம்புகள் மிகுந்த இடத்திலும் அறிவுடையோர்
செல்ல மாட்டார்.

"அரவ மமர்களம்" என்றும் பாடம்,

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Sep-14, 5:22 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 160

சிறந்த கட்டுரைகள்

மேலே