உனக்கே எல்லா புகழும் புகழ்ச்சியும்

..."" உனக்கே எல்லா புகழும் புகழ்ச்சியும் ""...

தாயின் கருவறையில்
சிசுவாய் இருக்கும்போது
கால்கலசைத்து உதைத்திட்ட
ஒற்றை உதைக்காய் காலம்
முழுதும் பெற்றெடுத்த தாயை
நீ பூமியில் பாதம் படாது பாசம்
குறையாது பார்த்துக்கொண்டாலும்
அந்த ஒரு உதைக்கு ஈடாய்
எதுவுமிங்கு ஆகிவிடாது
ஒரு தாயிக்கே இப்படியென்றால்
பல தாயின் உள்ளம்கொண்ட
என்னை படைத்த இறைவா
எனை படைத்து காத்து
காற்றில்லா கருவறையிலும்
உண்ண உணவளித்து
இந்த உலகம் காணசெய்தாய்
பார்க்க கண்களையும்
பேசிட குரலையும்
சுவைத்திட நாவினையும்
இப்படியாக உச்சிமுதல்
பாதம்வரை மிச்சமின்றி
பரிசளித்த என் இறைவா
என் காலம் தீர்ந்தாலும் உனக்கு
நான் நன்றிசொல்லிட முடியாது
எனை படைத்த இறைவா
உனக்காய் நன்றிசொல்ல
நன்றி என்ற வார்த்தையின்
இருக்கின்ற ஒரு புள்ளியின்
பல இலச்சம் கோடிகளில்
ஒரு சிறு பகுதியேயாகும்
என்னுடைய இந்த சிறிய பதிவு
என்னை படைத்த இறைவா
காலமெல்லாம் அடிபணிந்து
உனக்கு மட்டுமே சிரம் தாழ்த்தி
நீ காட்டித்தந்த பாதையில் நடந்து
உனக்கு உண்மையாய் வாழ்வதே
என்றும் உனக்காய் நான் செய்யும்
நன்றியின் உச்சமாகும் ,,,,,,,,

என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்..

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (18-Sep-14, 11:02 am)
பார்வை : 1378

மேலே