காதல்

அது எப்போதும் இப்படித்தான்
தேவையானதை விட்டு விட்டு
தேவையில்லாததை தேடி எடுத்துக் கொள்ளும்...
நேசிப்பு என்ற போர்வையில்
எப்போதும் கண்கொத்தி பாம்பாய் கண்காணிக்கும்
கனவுகளுக்கு கட்டுப்பாடு போடும்
கவிதைகள் எனக்கு மட்டுமே வேண்டும்
என்று பிடிவாதம் பிடிக்கும்,
எப்போதும் சண்டையிடும்
அவ்வப்போது கட்டி அழும்...
பேசவில்லை என்றால் ஏன் என்று கேட்கும்
பேசமாட்டேன் ஏன் என்று கேட்காதே
என்று அதட்டும்...
நீதான் கடவுளென்றும் சொல்லும்
நீதான் சாத்தான் என்றும் சொல்லும்
அதுவே உயிர் கொடுக்கும்
அதுவே உயிரையும் எடுக்கும்...
ஆமாம்...
காதல் எப்போதும் அப்படித்தான்...!

எழுதியவர் : Dheva S (30-Sep-14, 7:29 pm)
Tanglish : kaadhal endraal
பார்வை : 376

மேலே