இமையாகி போனவள் நீயடி - இராஜ்குமார்

இமையாகி போனவள் நீயடி
==========================

என்றும் குறையா அன்பை
தூவி திரியும் என் மனம்
குறைந்த அன்பையாவது
தொட்டுப் பார்க்க நிற்குது

இலட்சியமில்லா உயிரின்
அன்பற்ற இதயமாய் நானாம்
அதும் சரி ....

நினைவுகளை நினைக்கும்
நித்திரைக்கு ஏதடி நிம்மதி ?

உழைக்காத உடலின்
உணர்வுகள் உறங்கி விடுமோ ..?

அடுக்கி வைத்த அன்புகளை
அடித்து துரத்த வழி எதுவோ ?

காதலின் உயிர் துடிப்பில்
முதல் துடிப்பு மட்டுமா காதல் ?

எல்லா துடிப்பிலும்
இதயத்தை இணைத்து
இமையாகி போனவள் நீயடி .!

- இராஜ்குமார்

நாள் : 08 - 07 - 2012

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (9-Oct-14, 9:40 pm)
பார்வை : 300

மேலே