கனவும் இருப்பதில்லை - இராஜ்குமார்

கனவும் இருப்பதில்லை
=======================

கற்பனை வளருதுதடி
உந்தன் கற்பனையால்

வாசத்தை தூவிய
வசந்த மலரே
வாடி போனால்
தென்றலில் என்ன
தேன்துளியா சிந்தும் ..?

கைகோர்த்த கணங்களில்
இதயம் இணையாமல்
இறந்து போயிருக்குமோ ..?

கனவில் மிதந்தால்
கண்கள் திறப்பதில்லை
கண்கள் திறந்தால்
கனவே இருப்பதில்லை

- இராஜ்குமார்

நாள் : 10 - 12 - 2012

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (11-Oct-14, 11:14 pm)
பார்வை : 544

மேலே