ஊடகம் ஓர் நாடகம் - இராஜ்குமார்

ஊடகம் ஓர் நாடகம்
=================

ஊடகம் உயர்தர
ஊமையாய் இல்லை

அதே சமயம்
உண்மைகளை
மறைக்க மறுப்பதில்லை

உண்மையை உடனே
உரைக்க போகுமுன்னை
ஊடகம் ஊமையாக்குவதில்
துளியும் வியப்பில்லை

நீ பலரிடம் பகிர்ந்தாலும்
பொய் சொல்ல பயமில்லை

எது சொன்னாலும்
அப்படியே கேட்க - இங்கே
அமர்நிலை சோம்பேறி அதிகம்

கசக்கிப் போட்ட தாளும்
காந்தி நோட்டாய் மாறும்
சட்டை நிறத்தில் மட்டும்
காவல்துறை வாழும்

ஊடகம் சொல்லும் பொய்யால்
நாடகம் நடக்கும் மெய்யாய்

- இராஜ்குமார்

நாள் : 10 - 12 - 2012

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (13-Oct-14, 4:04 pm)
பார்வை : 760

மேலே