பதில் சொல்லடி

எத்தனை காலம் காத்திருபேனடி
இதற்கு முடிவு இல்லையா
இதுதான் வாழ்கையா
நெஞ்சம் புழுங்குகிறது
கைகளை கட்டிவிட்டார்கள்
கண்ணீர் மட்டும் என்வசம்

எப்பொழுது என்னை சேர்வாயடி
நான் தவிப்பது தெரியவில்லையா
கண்களை மூடிகொண்டாயா
இல்லை திறக்க பயமா
நிஜம் கசக்கிறதா

எப்படி வாழ்வேனடி இனி
வெற்று நிலமாய் இருக்குது மனம்
காலம் கடந்து போகுமோ
கடத்த முடியவில்லை
தனிமை கொல்கிறது

கதர வைத்தாயடி என்னை
என் மேல் கோபம் என்று தோழி சொன்னால்
காதல் தீர்ந்து போனதா
இல்லை புதைத்து விட்டாயா
என்னையும் சேர்த்து புதைத்து விட்டாயடி

கை மீறி போனதடி வீணை
மீறவில்லை பிடிங்கிவிட்டார்கள்
என் வாழ்க்கை பிறர் வாழ நான் பிறந்தேனோ
பாசக்கயிறு கழுற்றை நெருக்குகிறது
இது எல்லாமே மாயையா

எத்தனை காலம் காதலித்தோமடி
காலம் கைகொட்டி சிரிக்கிறதே
எவரிடம் சொல்வேன்
காதல் முடிந்ததா இல்லை
நான் மடிந்தேனா
பதில் சொல்லடி.... சாகக்கிடக்கிறேன்...

எழுதியவர் : நித்திலன் (22-Oct-14, 11:50 am)
Tanglish : pathil solladi
பார்வை : 402

மேலே