சாலை ஓர சக மனிதன் - இராஜ்குமார்

சாலை ஓர சக மனிதன்
=====================

நகரும் பேருந்தை
துரத்தும் மனிதன் - அவன்
பாதம் தேடுவது படிகளை ..!

நகர பேருந்தில்
ஏறாத ஒருவன் - அவன்
தேகம் காரின் குளிரில் ..!

சமூக இரைச்சலில்
நனையும் மனிதன் - அவன்
மனதின் ஆவல் அமைதி ..!

திரைப்பட இசையில்
மூழ்கிய ஒருவன் - அவன்
உலகம் உருப்படா உவகை ..!

கண்முன் காவலில்
நிமிர்ந்த உருவம் - அவர்
உள்ளங்கை முதுமை பருவம் ...!

நிறைந்த கல்வியில்
அயராத இளமை - அவன்
எழுச்சியை முடக்கும் வியாபாரம் ..!

சாக்கடை சகதியில்
அடைந்த பலரும் - அவர்கள்
விரலில் பிச்சை பாத்திரம் ..!

புத்தம்புது வண்டியில்
அமர்ந்த குடும்பம் - அவர்கள்
கூடையில் கோவில் பிரசாதம் ..!

கையேந்தி கடையில்
நிற்கின்ற சிறுவன் - அவன்
கைகள் கழுவியது கல்வியை ..!

வெளிநாடு விருந்தில்
திளைக்கும் வாலிபன் - அவன்
சிந்தனை குடிப்பது மதுவை ..!

- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (26-Oct-14, 12:43 pm)
பார்வை : 121

மேலே