கொலை மிரட்டல்

யோ ஏட்டு. அங்க பாரு. ஒரு பிச்சக்காரன் நிக்கற மாதிரி இருக்கு.

அய்யா நா எற்கனவே அந்த ஆள விசாரிச்சென். அந்த பிச்சக்காரனுக்குப் பாதுகாப்பு தரணுமாம்.

ஏய்யா ஊரில இருக்கற பெரிய மனுஷங்களுக்கு பாதுகாப்புக் கொடுக்கவே நாம தெணறிட்டு இருக்கோம். பிச்சக்காரங்களுக்கெல்லாம் நம்மால பாதுகாப்புத் தரமுடியுமா? சரி சரி அந்த பிச்சக்காரன் என்ன சொல்றான்?

அய்யா. அவன் தான் பிச்சக்காரர் சங்கத் தலைவராம். அந்த ஏரியா ரவுடிங்க அவன்கிட்ட மாமூல் கேட்டுத் தொல்லை கொடுக்கறாங்களாம். மாமூல் தரமுடியாதுன்னு சொன்னதும் கொலை மிரட்டல் விடறாங்களாம். அதனால தான் தன் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்புத் தரணும் கேட்டுத் தொல்லை கொடுக்கறான் அய்யா.

எழுதியவர் : மலர் (30-Oct-14, 2:33 pm)
Tanglish : kolai mirattal
பார்வை : 177

சிறந்த நகைச்சுவைகள்

மேலே