என் அண்ணனுக்கு ஓர் மடல் -புவனா சக்தி

அன்புஉள்ளம் கொண்ட
பாசம் மிகுந்த என் அண்ணனே !

உன் வருகையை எதிர் நோக்கும்
உன் தங்கையின் மடல் இதுவே!

நானும் எந்தன் விழியும்
காத்திருக்கிறது உன் வரவிர்ககவே !

நான் சிறப்பாய் வாழ வழி வகுத்தாய் !
நீ அதை பார்க்க ஏன் மறுத்தாய்?

நீ போகும் பாதையில் இருக்கும்
முள்ளை பொருப்படுத்தவில்லை !
என்னை எண்ணி நீயும் பார்க்கிறாய் !

ஆனால் என் மேல் கருணை இல்லையோ?

என் விழிக்கு உன் உருவம் என்று புலப்படுமோ ?

சீரும் சிறப்பாய் நான் வாழ அரவணைத்து .
சிறாட்டி பாராட்டி என்னை வளர்த்தாய் !

அழும் வயதில்
நீ எனக்கு தாயாய் இருந்தாய் .
சிரிக்கும் வயதில்
நீ எனக்கு தோழனாய் இருந்தாய் .

நான் எத்தனையோ படிகளை தாண்டி
இன்று உயர் நிலையில் இருக்கிறேன் .
இதை பார்க்கத்தான் நீ ஆசைப்பட்டாய் !
ஆனால் ஏன் பார்க்க முடியவில்லை?

என் மேல் பாசம் வைத்த அளவுக்கு
என்மேல் கருணை இருந்திருந்தால்!
நீ என்னை விட்டு போகாமல் இருந்திருப்பாய்.

இன்று உன் பிறந்த நாள்
ஆனால் ! இன்றோடு
நீ எங்களை விட்டு பிரிந்து ஆறு வருடங்கள் ஆகிறது .
நம்ப முடியவில்லை நீ இல்லை என்று .

இப்படிக்கு உன் முகம் பார்க்க ஏங்கும்
உன் அன்பு தங்கை !புவனா .

எழுதியவர் : புவனா சக்தி (31-Oct-14, 2:55 pm)
பார்வை : 215

மேலே