++திடுக்கிடும் திருப்பங்கள்++பாகம் 2++

சட்டென்று ஒரு சில்லென்ற உணர்ச்சி....

பார்த்தால் அவன் பாயில் படுத்திருந்தான்...

அவன் வீட்டிலே...

அப்போது... இதுவரை கண்டதெல்லாம் கனவா..?!??

குழம்பிய சிந்தனையுடன் வீட்டை விட்டு வெளியே வந்தான்..

வீட்டிற்கு முன்னே அவனது ஒற்றைச்செருப்பு அவனைப் பார்த்து பல்லிளித்தது...

அப்போ...

இன்னொரு செருப்பு...

படபடவென வந்தது அவனுக்கு...

தனியாய் இருப்பவனுக்கு தடை போட யாருண்டு...

நேற்று கனவிலே யாரையோ துரத்தியவன் இன்று தன் கனவினைத் துரத்த ஆரம்பித்தான்..

கனவில் கண்ட அதே ஒத்தையடிப்பாதை அவனை வரவேற்றது...

பகலில் கூட ஒரு தவளை இவனைப் பார்த்து பதறியவாறே கத்திக் கொண்டிருந்தது...

ஒத்தையடிப் பாதையை கடந்தவன் ஊரின் எல்லையை அடைந்ததும், அடர்ந்த காடானது இருளும் பகலும் கலந்து எதிர்பட்டது...

இரவில் கனவில் வந்த மலையானது, இப்போது 'பே' என்றவாறு எதிரில் நின்றது..

இவன் மலையேறினான்..

இறங்கியவுடன் கனவில் வந்த அதே ஆறு தேம்பி தேம்பி அழுவதைப் போல ஓடிக்கொண்டிருந்தது...

இவன் பிரமை பிடித்தவன் போல குதித்தான்.. நீந்தினான்.. கரை சேர்ந்தான்...

கொஞ்சம் தூரத்தில் கனவில் கண்ட அதே பாழுங்கிணறு..

"வந்திட்டியா" "வந்திட்டியா" என்பது போல வாயைப் பிளந்து நின்று கொண்டிருந்தது...

அருகிலிருந்த மரமோ... பேய் பிடித்து ஆடுவது போல "வா" "வா" என்று தலையாட்டிக்கொண்டிருந்தது...

ஓடியவன் மூச்சுவாங்கியபடியே அந்த கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தான்..

கனவில் காலியாய் வந்த கிணறு, அழுக்கு தண்ணீரால் நிறைந்திருந்தது...

கனவில் கண்ட அதே மனிதன், சிலையாய் இவனைப் பார்த்து சிரித்தபடி...

அந்த சிலையானது தண்ணீரில் மிதந்த படி...

இவன் இதயம் இல்லாதவனைப் போல.. திகிலுடன் நின்று கொண்டிருந்தான்...

எங்கோ தொலைவில் இவன் இதயம் துடிக்கும் ஓசை கேட்டது...

"லப் லப்"

"லப் லப்"

"லப் லப்"

(தொடரும்)

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (31-Oct-14, 11:46 pm)
பார்வை : 400

மேலே