++திடுக்கிடும் திருப்பங்கள்++பாகம் 3++

இவனுக்கு ஒன்றுமே புரியவில்லை...

மனம் முழுவதும் பயம் ஆக்கரமிப்பு செய்திருந்தது..

சுற்றி சுற்றி இங்கும் அங்கும் பார்த்தான்.

ஒரு பறவை கூட கத்தாமல்.. அந்த இடமே மனித நடமாட்டமில்லாத மயானம் போல் கண்ணில் பட்டது.

திடீரென சுற்றுப்புறம் முழுதும் ஒரு இருள் சூழ்ந்தது..

இப்பொழுது தானே விடிந்தது...

அதற்குள் என்ன இருட்டு...?!?!? என நினைத்துக் கொண்டு இருக்கும் போதே....

இவன் நினைவுகள் பின்னோக்கி சென்றது...

சிறுவயதில் அடிக்கடி இவனுக்கு ஒரு கனவு வரும்.

இவன் எப்போதும் பாயில் தான் படுத்து தூங்குவான்.

திடீரென யாரோ இருவர் வருவார்கள்.

இவன் படுத்திருக்கும் பாயின் இருபுறமும் பிடித்து இவனை அப்படியே தூக்குவார்கள்.

பின் எங்கோ தூக்கிக்கொண்டு போய் இப்படியும் அப்படியும் தாலாட்டுவது போல அந்தப் பாயை ஆட்டியவாறே இவனை ஒரு கிணற்றுக்குள் தூக்கிப்போடுவார்கள்...

அந்த கிணறு முழுதும் நீர் நிறைந்திருக்கும்...

அப்படியே மேலேயிருந்து அந்த கிணற்றுக்குள் இவன் விழுந்து மூழ்கும் போது ஒரு குளிர்ச்சியான உணர்வு இவன் உடல் முழுவதும் பரவும்...

சட்டென முழித்து விடுவான்.

முழித்துப் பார்த்தால் அவனது பயமோ... இல்லை பாயின் பயமோ... அவன் பாய் முழுதும் நனைந்திருக்கும்.. அடுத்த நாள் அதற்காய் அவன் அப்பாவிடம் அடி வாங்கியது வேறு கதை...

அந்தக்கனவு அவனுக்கு அடிக்கடி வரும்.

நினைவுகளை ஒரு நிலைப்படுத்தி அவன் யோசித்து பார்த்த பொழுது.. ஒரு தெளிவு வருவதைப் போல உணர்ந்தான்.

அப்பொழுது சூழ்ந்திருந்த இருட்டு விலகி வெளிச்சம் வருகிற மாதிரி இருந்தது..

கிணற்றினை உற்றுப்பார்த்தான்..

ஆம்.

அதேதான்..

அந்தக் கிணறு

அவனது சிறுவயதில் கனவில் வரும்

அதே கிணறு.....

(தொடரும்)

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (2-Nov-14, 11:37 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 393

மேலே