என்னை விரும்பும் -நீ

என்னை விரும்பும் -நீ

என்னவனே ....
என்னை விரும்பும் -நீ
உன்னால் பெற்ற பாக்கியம் ...
என்றே நினைக்கதோன்றும் ....!!!

காதலர்
ஒருவரை ஒருவர் ...
விரும்புவது - விதையில்லா
கனிபோல் அன்பே ....
முழுபயனையும் நாமே ...
சுவைக்கிறோம் ....!!!

திருக்குறள் : 1191
+
தனிப்படர்மிகுதி
+
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 111

எழுதியவர் : கே இனியவன் (6-Nov-14, 6:29 am)
பார்வை : 124

மேலே