காதல் பருவமழை

என்னவனே ...
உன்னை நானும் ..
என்னை நீயும் -சந்திக்கும்
கணப்பொழுது இன்பத்தின் ...
உச்சமடா ....!!!

காதலர் நாம் ...
ஒருவரை ஒருவர் சந்திக்கும் ...
அந்த கணப்பொழுது ...
காதலர் இதயத்தில் பொழியும் ..
காதல் பருவமழை ....!!!

திருக்குறள் : 1192
+
தனிப்படர்மிகுதி
+
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 112

எழுதியவர் : கே இனியவன் (6-Nov-14, 6:40 am)
பார்வை : 115

மேலே