என்னை நினைக்கிறாயா

என்னவனே ....
உன்னை உயிராய்
நினைக்கிறேன் - நீயும்
என்னை நினைக்கிறாயா ...?

என்னை நீ ...
உயிராய் நினைக்காதபோது ..
எனக்கேதடா இன்பம் ...?
உன்னால் எப்படி இன்பம் ...
கிடைக்கும் ....?


திருக்குறள் : 1195
+
தனிப்படர்மிகுதி
+
நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 115

எழுதியவர் : கே இனியவன் (6-Nov-14, 7:08 am)
பார்வை : 119

மேலே