என்னமோ ஏதோ - சந்தோஷ்

நீ போகும்
பாதைகளெல்லாம்
எறும்புக்கள்அணிவகுத்து
பின் தொடர்வது ஏனோ ?

ஓ ...!
நேற்றுதானே உன்னை
தமிழ்த்தேனில்
கவிதை செய்தேன் தானே?


பின் தொடரட்டும்
எறும்புகள் - அதுனாலே
உன்னை
பின் தொடரமாலிருப்பார்கள்
வம்பர்கள்..!

---------------------------------------

பரிசோதித்த மருத்துவர்
சொல்கிறார்
என்னுடலில் சர்க்கரை குறைவாம்..!

நீ அங்கிருக்கும்போது
எப்படி இனித்திடும்
என் தேகம்.?
ஆமாதானே -என்
காதலி தேனே ...!

---------------------------------------

நானொரு தீவரவாதி
என்கிறேன்
நம்பவே மாட்டிகிறார்கள் .
இந்த மக்கள்..

என் செல்லமே...!
நீ பதில் சொல்

நான் தீவிரவாதிதானே....?
உன்னை காதலிப்பதில்......!
---------------------------------------

இருவரியில் ஒரு
காதல் கவிதை
கேட்டாய் அல்லவா..!

இதோ எழுதிக்கொள்..!


== நான் மழை - அதில்
== நீ நனை

---------------------------------------
-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (9-Nov-14, 6:51 pm)
பார்வை : 150

மேலே