நகைச்சுவை மருந்து

நாட்டு வைத்தியர்; ஏண்டா !கால தாங்கி தாங்கி நடக்குற?

சிஷ்யர்; எனக்கு உடம்பெல்லாம் வலிக்குது அண்ணே ! மூட்டுக்கு மூட்டு வலி ...கால் எடுத்து நடக்க முடில ...ஏதாவது மருந்து சொல்லுங்கண்ணே ...

நாட்டு வைத்தியர்; உனக்கு வாய்வு பிடிச்சிருக்கு ...முடக்கு வாதம் பா .அதான் ..சரி நீ சாப்டியா?

சிஷ்யர்; இல்லண்ணே.

நா;வை;சரி வெறும் வயித்ல நா சொல்றத நீ சாப்டனும் ... நீ போய் வயலோரத்ல இருக்குமே முடக்கத்தான் கீரை கொடிஅத பறிச்சிட்டு வா?

சிஷ்யர்; அது எப்டி இருக்கும்ணே?

நா;வை; கொடிபோல படர்ந்த்து இருக்கும் . அதோட இலைகளுக்கு இடைல காது ஜிமிக்கி போல காய்கள் இருக்கும் ..அத நாம சின்ன வயசுல நெற்றில டப் டப்னு அடிப்போமே ...அந்த கொடிய அப்டியே பறிச்சிட்டு வா...அப்புறம் முருங்கை இலைகளப் பறிச்சிட்டு வா...

சிஷ்யர்; சரிங்கண்ணே எனக்கு தெரியும்ணே...இதோ இந்தாங்கண்ணே

நா; வை; முடக்கத்தான் குச்சி, விதைகள மட்டும் எடுத்துக்கணும் ,அப்புறம் முருங்கை குச்சிகளையும் அதோட சேர்த்து அலசிட்டு ஒருசொம்பு நீர்ல பாத்திரத்ள ஊற்றி அடுப்பில் வைத்து இந்த குச்சிகளையும் கொஞ்சம் கல் உப்பும் சேர்த்து கொதிக்க வைத்து லேசான சூட்டில் குடிக்கணும் சூடா குடிச்சிட்டா அப்புறம் என்னட்ட வரக் கூடாது ..சரி இந்தா இதை குடி.. குடிச்சிட்டு இங்க இருக்கக் கூடாது ...''பிதாமகன் ''படத்ல நடிகர் சூர்யா லேகியம் வித்த கதை ஞாபகம் இருக்கா...? அதுல அவர் சொல்ற மாதிரி வாய்வு எல்லாம் பறந்துரும் ......ச்ச என்னடா...இங்கேயேவா...வெளிய ஓடிப் போயிரு.....

நீங்களும் செய்து பாருங்க ...சரி சரி சிரிக்காதீங்க...உண்மையிலே இது மருந்துங்க...கொஞ்சம் நகைச்சுவையா.....?????

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (17-Nov-14, 5:03 am)
பார்வை : 337

மேலே