காத்திரு கண்ணே
கதாபாத்திரம்: இராணுவ வீரனாக நானிருந்து விடைபெற்றால்....
இரயில் மறையும்வரை
தூவானத்திற்க்கு மத்தியில் தூரிகையாய்
தெரிந்த உனது உருவம்...
வான் துளி கிளப்பிய
மண்வாசனையுடன் கலந்த
உன் விழித்துளி கிளப்பிய உன் வாசணை...
சொல்ல முடியாத சோகங்களை
உள்ளடக்கி, சிரிக்க முயன்று தோற்றுப்போய்
சுழிந்த உன் உதடுகள்...
கண்மணியே, உன் கையசைவின்
வேகத்தில் கிழிந்த காற்று,
என் முன் இருக்கும் தடைகளை
தகற்த்தெறிந்திறுக்கும்...
கட்டாயம் வருவேன், உன் கரம் பிடிக்க
காத்திரு கண்ணே, காலம் நம் காதல் கோலத்தில்
வண்ணமிடும்...