இதயத்தை கல்லாக்கி
இன்று என் விடியல் உன்னைக் காணத்தான்...
இன்று என் பொழுது உன்னோடு கழிக்கத்தான்...
இன்று என் நடை உன் கை விரல் பிடித்துத்துதான்...
இன்று என் கண்ணில் உன் முகம் மட்டும் தான்...
இத்தனை கனவுகள் இருந்தாலும்
அதை கனவில் மட்டும் கண்டு...
கல்லாக உன்னைக் கடந்து செல்கிறேன்
இது கூட உன் மேல் உள்ள காதலால் தான்..