மோதியே வெல்க முனைந்து

எதையும் வெறுக்காதே எங்கெதற்கும் அஞ்சி
பதையும் பயம்தீதே பாராய் - கதையில்
முயல்தோற்கும் ஆமைதான் முன்வரும் வாழ்வில்
முயல்நீ முயன்றால் முதல்

ஆற்றியது தேநீரை ஆற்றுகிற வேலைதான்
மாற்றியது வாழ்வை முயற்சியே - போற்றியது
மோதி நரேந்திரரை மேதினியும் நீயும்தான்
மோதியே வெல்க முனைந்து

உன்னைத்தான் நம்பினால் ஓர்உயர்வே பின்னரும்
உன்னைத்தான் நீவளர்த்தால் ஊக்கமுமே - தன்னைத்தான்
ஆராய்ந்தால் பக்குவம்தான் ஆகிடுமே மின்னத்தான்
வாராய் வழிகாட்ட வே!

எழுதியவர் : புதுயுகன் (1-Dec-14, 6:38 pm)
பார்வை : 79

மேலே