சமநிலை மனிதம்
ஏறினால் ஏற்றுவதும்
வாரினால் தூற்றுவதும்
அந்த நாலு பேரின் நியாயம்....
ஏற்றினாலும் தூற்றினாலும்
ஏறிவா என்பதே
ஏறிவிட்டவர்களின் வாதம்...
ஏற்றத்தில் ஏமாற்றமும்
இறக்கத்தில் தடுமாற்றமும்
இணைந்தேதான் இருக்கிறது...
ஏறியவன் பாதையும் வேண்டாம்,
இறங்கியவன் போதையும் வேண்டாம்...
அப்படியே விட்டுவிடுங்களேன்,
சமநிலை சமத்துவத்தில்,
மனிதம் மலரட்டும்