மகேசுவரமூர்த்தங்கள் 1325 ஹரிஹர்த்தர்

வடிவம்
• ஞானம் செல்வம் இரண்டையும் தரும் வடிவம்
• சங்கன் என்ற அரசன் சிவன் மீது பற்றும், பதுமன் என்ற அரசன் திருமால் மீது பற்று கொண்டு யார் பெரியவர் என்ற வாதத்தினால் அம்மையிடம் முறையிட அவர்களுக்கு இருவரும் ஒருவரே என குறிக்க எடுத்த வடிவம்.
• சுவாத்தை மாற்றுவதால் ப்ரமத்தை அறியலாம். மேல் விவரங்களை குரு மூலமாக அறியவும்.
வலது - பிங்களை(சூரிய கலை நாடி)
இடது - இடகலை(சந்திர கலை நாடி)
சுழுமுனை - இரு பக்கங்களிலும் காற்றை செலுத்துதல்

வலது பாதி(சிவன்)
1 தலை கங்கை, பிறைச்சந்திரன், அக்னி, ஜடாமுடி. பின்புறம் சிரசக்கரம் அல்லது ஒளிவட்டம்,சடாமுடி
2 திருமுகம் நெற்றிக் கண்(அர்த்தநேத்திரன்), திருநீறு
3 காது தாடங்கம், மகர குண்டலம், சர்ப்ப குண்டலம்
4 கைகள் • மழு, அபய ஹஸ்தம்
• பரசு மற்றும் நாகம்
5 மார்பு ருத்ராட்சம்
6 இடுப்பு புலித்தோல் ஆடை
7 திருவாட்சி நாக வடிவில் சங்கன் குடை பிடித்தபடி
8 வண்ணம் வெண்மை
9 தோற்றம் கோரம்
10 வாகனம் வலது புறம் நந்தி
இடது பாதி(திருமால்)

1 தலை கிரீடம்
2 திருமுகம் திருநாமம்
3 காது மகர குண்டலம்
4 கைகள் சக்கரம், சங்கு அல்லது கதை மற்றும் ஊரு ஹஸ்தம்/(கடக முத்திரை) சங்க ஹஸ்தம். கேயூரம், கங்கணம்

5 மார்பு திருவாபரணங்கள்
6 இடுப்பு பஞ்சகச்சம்
7 திருவாட்சி
8 வண்ணம் நீலநிற மேனி
9 தோற்றம் சாந்தம்
10 வாகனம் இடது புறம் கருடன்

* கேசாதி பாதமாக விவரிக்கப்பட்டுள்ளன. சோழர் கால வடிவமும், பல்லவர் கால/இதர வடிவமும் சில இடங்களில் வேறு வேறாக இருக்கின்றன.
வேறு பெயர்கள்
சங்கர நாராயணர்
ஹரியர்த்தமூர்த்தி

வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
• சங்கரன் கோவில், திருநெல்வேலி மாவட்டம்
• தஞ்சைப் பெரிய கோயில்
• சங்கர நாராயண சுவாமி திருக்கோவில், தஞ்சை மேலராஜவீதி
• கங்கை கொண்ட சோழபுரம்
• சிதம்பரம்
• திருஅறையணிநல்லூர் (தற்போது அரகண்டநல்லூர் )- திருக்கோவிலூருக்கு எதிர்க்கரையில் பெண்ணையாற்றின் வடகரையில் உள்ள ஒரு சிறு குன்றின் மீது திருக்கோவில்
• திருச்செந்தூர்
• திருப்பெருந்துறை
• மீனாட்சி அம்மன் வசந்த மண்டபம், மதுரை
• நாகேஸ்வரர் கோவில், கும்பகோணம்
• குடுமியான் மலை குடவறைச் சிற்பங்கள்
• ஹரிஹர், ஹோஸ்பெட் அருகே துங்கபத்ரா நதிக்கரை, தாவன்கெரே மாவட்டம், கர்நாடகா
• கூடலி, சிவமோகா எனப்படும்ஷிமோகா- துங்காவும்(திருமால்) பத்ராவும்(சிவன்) சங்கமம்

இதரக் குறிப்புகள்
• சங்கர நாராயணர் கோயிற் கோமதியம்பிகை பிள்ளைத்தமிழ் என்றொரு நூலை முத்துவீரக் கவிராயரவர் என்பவர் இயற்றி இருக்கிறார்.
• வாமன புராணம்
• பேயாழ்வார் பாசுரம்
தாழ் சடையும் நீள் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்
சூழ் அரவும் பொன் நாணும் தோன்றுமால் சூழும்
திரண்டு அருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து

எழுதியவர் : அரிஷ்டநேமி (10-Dec-14, 1:24 pm)
சேர்த்தது : அரிஷ்டநேமி
பார்வை : 180

மேலே