வரலாற்றுவேதனை

பாவிகளே ..!
பாகிஸ்தானில்
பயங்கரம்
புரிந்து விட்டீர்களே ...

படிக்கப்போன பிஞ்சுகளை
துடிக்கத் துடிக்கக் கொன்று
துவம்சம் செய்துவிட்டீர்களே..


கைவேறு -கால்வேறாய் ..
தலைவேறு -உடல்வேறாய்..
ரத்த ஆறாய் ..சதைத்துண்டங்களாய்
பிள்ளைகளைப்பார்த்து
பெற்றவர்கள்
துடித்த துடிப்பும்
வடித்த கண்ணீரும்
உங்களுக்கு
ஒருஇலட்சிய ரசனை.
எங்களுக்கோ
ஒருவரலாற்று வேதனை.


ஒரு
பூஞ்சோலையை
பொசுக்கிப்போட்டுவிட்டு
பொறுப்பாளிகள் நாங்களென்று
பொறுப்பேற்றுக் கொண்ட தீவிரவாதிகளே ..!
தீர்ந்து விட்டதாஉங்கள் ரத்ததாகம் ..?
தீர்ந்துவிட்டதா உங்கள் கொலைமோகம்..?

இராணுவத்தை பழிவாங்க
இராணுவத்தினரின் பிள்ளைகளை
பலிவாங்கிவிட்ட
உங்கள் சித்தாந்தம்
உயரிய சித்தாந்தம் .

எல்லோரையும் அழித்துவிட்டு
யாரை ஆளப்போகிறீர்கள்..?
எந்தக்கொள்கையை
வாழவைக்கப்போகிறீர்கள்

எழுதியவர் : அண்ணாதாசன் (18-Dec-14, 12:19 am)
பார்வை : 370

மேலே