ஒத்திகை மட்டும் எனக்கு,

எத்தனை நாட்கள் -
கனவில் ஏங்கினேன்

அத்தனை நாட்கள் -
இப்படி இருந்ததில்லை

நெஞ்சம் நெடுஞ்சாலை போல -
நீண்டு செல்கிறது

விழி காண தவித்த என் -
இரு விழிகளும் நிலம் பார்த்து
வெட்கத்தைக் கூட்டுகிறது

விரல்களும் அச்சத்தினால் அல்ல -
நாணத்தினாலோ தடுமாறுகிறது

சிந்தனை மயங்கி சிதைக்கின்றது -
மனதை புழுவாக

கால்களும் தரையில் இல்லை-
மனதும் நினைவில் இல்லை

நீ சொல்லும் வார்த்தைகளை எண்ணியே
தொலைக்கிறேன் பகலிலே உள்ளத்தை

இது கனவா நனவா என்பது கூட-
தெரியாமல் அலைகிறது மனது
ஆசைத் தீயில்

ஓடி வந்து எனை உற்றுப் பார்த்து -
நீதந்த ஒற்றை ரோஜா சொல்லவில்லையடா

இது எனக்கு இல்லை -
என் உயிர் தோழிக்கு என்று

ஒத்திகை மட்டுமே எனக்கு -
என்றாலும்
ஒத்திகைதான் மிகச் சிறந்த நிகழ்வு
என்று மனம் தேற்றிக் கொள்கிறது ":"::":":":":

விழி வழிந்த சிறுதுளி இனிப்பது போல
நடிக்கிறது விழிகளும் உன் முன்னே ............

எழுதியவர் : கீர்த்தனா (18-Dec-14, 10:51 am)
பார்வை : 92

மேலே