குறுஞ்செய்தி

ஒவ்வொரு
பண்டிகை நாள்
வரும்பொழுது
என்னை
சார்ந்தவர்களின்
குரலை கேட்கும்
ஆவலோடு
அலைபேசியை
பார்த்துக்கொண்டிருப்பேன்.

வருவதென்னமோ
வாழ்த்துகளோடு
வெறும் வார்த்தைகள்
கொண்ட குறுஞ்செய்தி
மட்டுமே.

மனித உணர்வுகளை
நாம்
மறந்து கொண்டும்
மறைத்து கொண்டும்
இருக்கிறோம்.

நல்ல நாட்களில்
உறவுகளுக்கும்
ஒதுக்குங்கள்
சில நிமிடங்களை.
உணருங்கள்
உறவுகளின்
உன்னதத்தை!!!!

எழுதியவர் : மதுராம் (20-Dec-14, 9:08 pm)
சேர்த்தது : புதுவெள்ளம்
Tanglish : kurunseithi
பார்வை : 115

மேலே