பொங்கலோ பொங்கல் - சி எம் ஜேசு

வறுமை கலைந்த பொங்கல்
வாழ்த்துக்கள் உரைக்கும் பொங்கல்

மகிழ்வை நிறைக்கும் பொங்கல்
மனிதனை புதியவனாக்கும் பொங்கல்

எழுத்துக்களை குவிக்கும் பொங்கல்
ஏற்றங்களை கொணரும் பொங்கல்

பாட்டினை வளர்க்கும் பொங்கல்
தமிழ் நாட்டினை உயர்த்தும் பொங்கல்

வேட்டினை உடுத்தும் பொங்கல்
தமிழன் வீரத்தை உணர்த்தும் பொங்கல்

நெல் வளர்த்தால் பசி நீங்கும்
சொல்லுரைத்தால் நற்செயல் பிறக்கும்

கல் வந்து உளியிடம் சிற்ப்பமாகி
கலையாகி காட்சி பொருளாவதை போல

பொங்கல் பிறந்து பழமைகள் மாறாமல்
தமிழ் பண்பாடு வளர்க்கிறது - பொங்கலோ பொங்கல்

என் பொங்கல் வெண்மை காகிதங்களில்
கருப்பு எழுத்துக்களாகி உங்கள் வலைத் தளங்களில்

பொங்கட்டும் வாழ்த்துக்கள் 2015

எழுதியவர் : சி . எம் . ஜேசு (15-Jan-15, 9:36 am)
பார்வை : 976

மேலே