தனிமை

தனிமை

கற்பனையில் தோன்றுபவை எல்லாம்
காட்சியாய் காண்பதில்லை
காட்சியாய் காண்பவை எல்லாம்
கருத்தினில் நிற்பதில்லை
கருத்தினில் நிற்பவை எல்லாம்
கண்ணுக்கு தெரிவதில்லை
கண்ணுக்கு தெரிபவை எல்லாம்
மனத்தினில் பதிவதில்லை
மனத்தினில் பதிந்தவை எல்லாம்
நினைவினில் நிற்பதில்லை
நினைவினில் நிற்பவை எல்லாம்
நெஞ்சத்தை உருக்கவில்லை
நெஞ்சத்தை உருக்கியவை எல்லாம்
சொல்வதற்கு வார்த்தையில்லை
சொல்வதற்கு உள்ளவை எல்லாம்
கேட்பதற்கு யாரும்மில்லை
கேடபதற்கு ஆளிருந்தால்
செய்வதற்கு யாரும் இல்லை
செய்வதற்கு ஆளிருந்தால்
செய்கையில் நாட்டமில்லை
செய்கையில் நாட்டம் இருந்தால்
சிந்தைக்குள் உணர்வதில்லை
சிந்தையில் உணர்வளிக்க
சொந்தமென வருவாயோ
சோதனையை தீர்ப்பாயோ

எழுதியவர் : ராம் (29-Jan-15, 2:53 am)
Tanglish : thanimai
பார்வை : 77

மேலே