என்னை அறிந்தால் -என் பார்வை

என்னை அறிந்தால் -"பக்கா கௌதம் மேனனின் படம் "
சிறு வயதில் ஏற்படும் பாதிப்பினால் இழப்பினால் ஒருவன் வாழ்க்கை எப்படி தடம் மாறுகிறது என்பதை சொல்லும் படமே என்னை அறிந்தால் ..

படத்தின் பெரும் பலம் இரண்டு . ஒன்று அஜித் இன்னொன்று அதுவும் அஜித் தான் ..ஆம் உடல் அசைவுகளில் தோற்றத்தில் புதுமையான அஜித் . வசன உச்சரிப்பிலும்(DUBBING) வித்யாசமான முயற்சி செய்து புதுமையான அஜித்தாக நடித்திருக்கிறார் ...

அனுஷ்கா அழகு .த்ரிஷா இன்னும் அழகு.. படத்தின் காதல் காட்சிகளில் இவர்களின் நடிப்பு மிக அழகு ..

அருண் விஜயின் நடிப்பு அபாரம் .படத்தின் இறுதி காட்சியில் அவர் நடிப்பு அஜித்துக்கு ஈடு செய்யும் வகையில் இருக்கிறது ... படத்தின் ஒரு காட்சியில் அருண் விஜய் பேசும் வசனம்
"எங்களுக்கும் காலம் வரும்
காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் சாகடிபோம்மே" என்று வில்லத்தனத்தை அள்ளி தெளிக்கிறார் ...

படத்தின் நகர்தலில் பெரும்பங்கு வகிப்பவர் இசைஅமைப்பாளர் ஹாரிஸ் ..படத்தின் பின்னணி இசை படத்திற்கு இன்னும் வேகத்தை கூட்டுகிறது..அதாரு அதாரு படத்தின் தாறுமாறு பாட்டு..மழை வர போகுதே சுகமான தாலாட்டு ..வரும் படங்களில் ஹாரிஸ் கௌதம் கூட்டணி தொடர்ந்தால் இன்னும் நன்றாக இருக்கும் ..


கௌதம் மேனனின் வசனங்கள் ரொம்ப இயல்பாக இருக்கிறது ..இந்த படத்தில் நான் கவனித்த விடயம் படத்தின் ஆரம்பத்தில் போடப்படும் மது அருந்த கூடாது போன்ற பதாதைகள் இல்லை..அதற்காகவே கௌதமை பாராட்ட வேண்டும் ..
FILM GONNA BE A COMPLETE ENTERTAINER ,NO VULGARITY. NO ITEM SONG ,NO PUNCH DAILOGUES ..
ITS COMPLETE GOUTHAM MENON FILM ACTED BY "THALA AJITH KUMAR "
என்னை அறிந்தால் அஜித்துக்கு இன்னொரு வெற்றி படம் ....

எழுதியவர் : அருண்வாலி (7-Feb-15, 5:28 pm)
சேர்த்தது : அருண்ராஜ்
பார்வை : 402

சிறந்த கட்டுரைகள்

மேலே