கர்வம் கூடாது
கர்வம் கூடாது'..
...........................
அவன் வகுப்பில் அனைத்து தேர்வுகளிலும் ' First Rank' வாங்கி வந்தான். அதனால் அவனுக்கு சற்று கர்வம் இருந்து வந்தது.
சக மாணவர்களிடம் பழகும்போதும் கர்வத்துடனேயே பழகி வந்தான்.
அரையாண்டு தேர்வு வர இருந்தது...
மோகனின் பள்ளி ஆசிரியர் மற்ற மாணவர்களிடம் 'எல்லோரும் நன்கு படித்து,மோகனைப்போல முதல் மதிப்பெண் எடுக்க முயற்சிக்க வேண்டும் என்றார்.அதனால் மோகனுக்கு தலைக்கனம் அதிகமாகியது.
கர்வமும் ...தலைக்கனமும் சேர அவன் தேர்வுகளுக்கு சரியாக படிக்கவில்லை. தேர்வுகள் முடிந்து மதிப்பெண்கள் வந்தபோது ....
அவனது ரேங்க் 20 ஐ தாண்டியது.
ஆசிரியர் ...அவனிடம் அதற்கான காரணத்தைக் கேட்டபோது.....
இந்த தடவை முதல் ரேங்க் எடுத்த சீனு சொன்னான்.
'சார்...நீங்கள் எப்போதும் மோகனைப் புகழ்வதால் ...அவனைப்போல வரவேண்டும் என நாங்கள் கஷ்டப்பட்டு படித்தோம்.
ஆனால் அந்தப் புகழ்ச்சியால் கர்வம் அதிகமாக மோகன் கவனம் படிப்பில் செல்லவில்லை' என்றான்.
சீனு கூறியதில் இருந்த உண்மையை உண்ர்ந்த ஆசிரியர்,
'மோகன், நாம் எந்த நிலையிலும் கர்வம் கொள்ளக்கூடாது...
புகழ்ச்சி ஒருவனை மேலும் முன்னேறவிடாமல் தடுக்கும்...'என்றார் .
மேலும் 'நான் உன்னை புகழ்ந்ததை உன்னை மேலும்
ஊக்கிவிக்கத்தான் என்பதை உணர்ந்து கொள்' ' என்றார்.
ஆசிரியர் கூறியதை மோகனும் உணர்ந்து கொண்டான்.
ஆம்,நண்பர்களே.,
நாமும் எப்போதும் நமக்கு ஈடு யாருமில்லையென்று
கர்வமோ, அகம்பாவமோ கொள்ளக்கூடாது.
நம்மை விட வல்லவர்கள் எல்லா துறையிலும்
உண்டு என்று எண்ண வேண்டும்..,