என் தேவதை

பேசி பேசி திரிந்து கொண்டிருக்கிறேன் என் வாழ்கையில் ஏனெனில் நான் மார்க்கெட்டிங்கில் வேலை செய்வதால். நகர தொடங்கிய வாழ்க்கை....... நான் சமூகத்தில் ஒருவனாய் வலம் வந்தேன்.
பொழுதுகள் நகர்ந்தன .....
காலமும் நிறைய கற்று தந்தது.....

ஓர் நாள் நான் செல்லும் வீதியில் நாய்களின் ஓலம் நடுவே ஒரு மெல்லிய அழுகுரல்... பதரியவனாய் அருகில் சென்றேன் ஒரு பச்சிளம் பெண் குழந்தை!. அழகுடன் விண்மீன்கள் முக பொலிவுடன் இருந்தது அந்த குட்டி தேவதை!!!. நாய்களை விரட்டி மார்புடன் அணைத்து கொண்டேன் குழந்தையும் அழுவதை நிறுத்தியது... யாரோ ஒருவள் வீசிய மழலை இவள் என்று புரிந்தது.. வீடு நோக்கி சென்றேன் குட்டி தேவதையை நீராட்டி தூங்கவைத்து விட்டு சென்றேன் என் வேலைக்கு.

நான் செல்லும் வழியில் என் கடந்த கால நாட்கள் முன் வந்தன. அந்த பிஞ்சி போல் என்னையும் என் பெற்றவல் கோவிலில் வீசி சென்றாள். அன்று முதல் நான் அனாதை......

என் தனிமையை மறக்க கிடைத்தவள் இவள் என்று வளர்த்தேன் இந்த தேவதையை ....

ஓர் இரு ஆண்டுகள் பிறகு தெரிந்தது இவள் என் அண்டை வீட்டு பெணின் தகாத உறவில் வந்தவள் என்று... வெளி காட்டி கொலாதவனாய் .வளர்த்தேன் என் தேவதையை.......

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (26-Feb-15, 4:59 pm)
Tanglish : en thevathai
பார்வை : 404

மேலே