ஒரு கணினி இளைஞனின் காதல்

என் அருகில் அவள் அமர
எதிரில் இருந்த கணினி குளிர்ந்தது
நான் சூடானேன்......!

அவளின் இளந்தளிர் விரல்கள் காலாக......!
நிறம் தரித்த நகங்கள் கொலுசாக......!
எழுத்துப்பலகையில் நடனமாடியதை
நினைத்துப்பார்க்கையில்......!
என் முகநூலின் கடவுச்சொல்லும்
மனம் விட்டு கடந்து போயின......!

அவளின் விரைப்புற்ற கேசங்கள்.....!
தற்செயலாய்
என் தோளை வருடியதால்.....!
என் உணர்ச்சிகள்
தணலாகி தடுமாறின......!

அவள் உதடுகளை
அளவுடன் திறந்து
உதிர்த்த சிரிப்புக்களால்.....!
அவள் கண்ணத்தில்
தோன்றிய குழி......!
எனக்கு காதல்
தோன்ற வழி ஆனது......!

அவள் உதடுகளில்
ரேகையாய் படிந்த
ஒற்றைக் கேசம்......!
சிகப்பு புல்வெளியில்
நான் செல்லும்
ஒற்றையடி காதல் பாதையானது......!

நான் காதலில்
சிக்கி தவிக்கின்றேன்.......!
அவள் ஒன்றும் அறியாதவளாய்
சுற்றித்திரிகின்றாள்......!
நான் உதடுகளால் உளறுகின்றேன்......!
அவள் கண்களால் பேசுகின்றாள்.......!

என் மடியில் தவழ்ந்த காதலை
அவளிடம் சொல்ல
இந்த மடிக்கணினி உதவிடுமா?
என் மனதில் அலைபாயும்
காதலை சொல்ல
இந்த அலைபேசி உதவிடுமா?

மனதில் தேக்கி வைத்த காதலை
மடைதிறந்தேன் மனதைக் கல்லாக்கி.....!
வாயடைத்து சிரித்துச்சென்றாள்
வார்த்தை ஏதும் சொல்லாமல்.....!
மூச்சடைத்து மயங்கினேன்
விழித்துப் பார்த்தேன்
பிணி உள்ளோர் கூடுமிடத்தில்......!

வீற்றிருந்தால், என் அருகில்
வாழ்த்து அட்டை ஒட்டிய
மலர்கொத்துக்களுடன்.....!

வாழ்த்து அட்டை மேல்
என் கரத்தை வைத்து
பற்றினாள் அவள் கரத்தால்......!
அட்டையாய் ஒட்டியபடி.....!

எழுதியவர் : பெ.கோகுலபாலன் (28-Feb-15, 8:47 pm)
பார்வை : 163

மேலே