பயம் - தொடர்கதை - ஐந்து - கிருஷ்ணா

..................முருகனை பார்த்துக்கொண்டிருக்கையில் பின்னே ஊர் உருவம் வெள்ளையாய் வந்து நின்றதும் மூளை நொடிப்பொழுதில் அவனது தலையை திருப்பியது.

" டே.. இப்படிதான் சத்தமே இல்லாம பின்னால வந்து நிப்பியா ? எரும.." அருதலடைந்தன் அமுதன்.

"ஏண்டா.. " வெள்ளை நிற டி-ஷர்ட் ல் இருந்த கார்த்திக் ஒன்றும் புரியாமல் வினவினான்.

..................நிம்மதி அடைந்தான் அமுதான். ஆனால் கார்த்திக்கிடம் எதுவும் சொல்லாமல் படுக்க சென்றான். ரொம்ப நேரம் தூக்கம் வரத்து கருப்புநிற ஜீன்ஸ் பேண்டையே பார்த்துக்கொண்டிருந்து பின் அவனை அறியாமல் உறங்கிப்போனான்.

...................உறங்கிய விழிகள் விழித்தன.கண் மும் பயங்கர இருட்டாய் இருந்தது. அருகிலிருந்த கை பேசியை எடுத்து மணியை பார்த்தான். அது 2.48 என காட்டியது. கண் மூடி உறங்க நினைத்தான். முடியவில்லை. அந்த கருப்பு நிற துணி மட்டுமே இவன் கண் முன்னே வந்தது. எழுந்து லைட்டை போட்டான். இப்போது படுத்தான். மேலே மின் விசிறி தெரிந்தது. அதையே உற்றுபார்த்தான். அதற்கு போட்டியாக ஏதோ அசைவதாய் தோன்றியது.

...............முகத்தை லேசாக திருப்பினான். சுவற்றில் மாட்டியிருந்த முகம் பார்க்கும் கை அகல கண்ணாடி இடமிருந்து வலமாக பின் வலமிருந்து இடமாக ஊசலாடியது. அதில் மறுபக்கம் உள்ள அறையின் அனைத்தும் வரிசையாக பிம்பமாக தெரிந்தது. அது மிக கோரமாகவும் பயமுறுத்துவதாகவும் இருந்தது.

................சற்று யோசித்து பின் மின்விசிறியை நிறுத்தினான். அது மெல்ல தனது சுழற்சியை நிறுத்தியது. இப்போது பார்த்தான். கண்ணாடி ஆடாமல் இருந்தது. சற்று நேரம் கழித்து மெல்ல தனது அசைவை துவக்கியது கண்ணாடி. அமுதனுக்கு மூச்சே நின்று விட்டது. இது போல முன்பெங்கும் அவன் பயந்ததில்லை. கதைகளில் மட்டுமே கேட்டிருக்கிறான். இப்போது தான் அவன் பயத்தை பார்க்கிறான். கால்கள் நடுங்கின. கவிழ்ந்து படுத்தான். அவனது கை அருகில் படுத்திருந்த கார்த்திக்-இன் கையை பிடித்தது.கார்த்திக் எந்த ஒரு அசைவுமில்லாமல் உறங்கிக்கொண்டிருந்தான். அமுதனுக்கு பின்னால் கண்ணாடி வேகமாக ஆட தொடங்கியது. அதற்கு நேர் எதிர்புறம் கருப்பு பேண்டும் கண்ணாடிக்கு ஏற்றார் போல் ஆடத்தொடங்கியது. பின் அந்த கருப்பு நிற துணி பெரிய கருப்பு உருவமாக மாறியது. அமுதன் கையை விட்டு கடீலின் கம்பியை இறுக்கி பிடித்தான். அந்த கரிய உருவம் கொடூரமாக முகம் மட்டும் வெள்ளையாக உடம்பு கருப்பு உருவம் போற்றியது போல் கரியதாக இருந்தது. அதன் கண்களில் நெருப்பு அனலாக பறந்தது. கனத்த கையைகொண்டு அந்த உருவம் படுத்திருந்த அமுதனை பின் பக்கமாக தாக்க தயாரானது.

எழுதியவர் : கிருஷ்ணா (4-Mar-15, 10:59 am)
பார்வை : 133

மேலே