ஊழ் விதி

ஊழ் (விதி)
//////////////////////

நீதிபதி அவனை எந்த உணர்ச்சியும் இல்லாமல் பார்த்தார். “இந்தாப்பா. விசாரணை முடிஞ்சாச்சு. நீ ஏதாவது சொல்லனுமா?” அவன் இல்லை என்று தலையாட்டினான்.
செய்யாத தப்புக்கு தண்டனை என்பதை விட இரண்டு வருஷம் ஜெயிலில் இருக்கணுமா என்ற கால அவஸ்தை தான் அவனுக்கு பெரிசாய் தெரிந்த்தது. ஜெயில் முதல் இரண்டு நாளைக்குத்தான் போரடித்தது. அப்புறம் சகஜமாகி விட்டது.

அன்றைக்கு நல்ல தூக்கம். ராத்திரியின் காவல் நடை ஷூ சப்தங்கள் கூட கேட்கவில்லை. முதுகில் குறுகுறு. உதறி எழுந்தான். அந்த மெல்லிசான வெளிச்சத்திலும் த்ரையில் ஒரு கட்டெறும்பு தெரிந்தது. லேசாக மினுமினுப்புடன் ஒரு கட்டெறும்பு. இதுவரை பார்த்ததில்லை. தூக்கம் க்லைந்த ஆத்திரத்தில் அதை நசுக்க காலை நகர்த்தினான். “ஏய் என்னை கொல்லாதே” எறும்பு பேசியது !!!. தரைக்குக் குனிந்தான். ”நாந்தாம்பா பேசினேன்- கொஞ்சம் என்னை தூக்கி வச்சிக்கோ சொல்றேன்”

உள்ளங்கையில் அதை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தான்.

பிரமிப்பு நீங்காமல் கேட்டான், “ ஆமா.. நீ எப்படி பேசறே”
”அதெல்லாம் உணக்கு எதுக்கு- நான் உன்னோட இங்கேயே இருக்கேன். உணக்கு பேச்சு துணையா”
தனிமை தொலந்த சந்தோஷம் !! பேசும் எறும்பு !! அவனுக்கு தூக்கம் வரவில்லை. வெளியில் போனதும் இந்த எறும்பை வச்சே பெரிசா சம்பாதிக்கனும். யோசனை விரிவாகி மிச்சம் இருந்த நாளெல்லாம் எறும்புக்கு வித விதமாக பேச சொல்லிக் கொடுத்தான். சின்னதாய் ஒரு பாட்டு பாடும் லெவலுக்கு எறும்பு தேறி விட்டது.

விடுதலை ஆனான். முதல் வேலையாய் எறும்பு ஷோ நடத்தணும் என்ற நினைப்பில் நடந்தவனுக்கு ஒரு நல்ல ஹோட்டல் கண்ணில் பட்டது. உள்ளே நுழைந்தான். டிபன் ஆர்டர் செய்துவிட்டு பாக்கெட்டில் இருந்து அந்த எறும்பை எடுத்து டேபிளில் விட்டு ஒரு காலி டம்ளரை கவிழ்த்து அதை பத்திரமாக்கினான் சர்வர் டிபன் கொண்டு வந்து வைத்துவிட்டு, சிநேகமாய் பார்த்து சிரித்தான்.

இந்த சர்வர் தான் பேசும் எறும்பை பார்க்க போகும் முதல் ஆள் என்று நினத்து கவிழ்த்த காலி டம்ளரை திறந்து எறும்பைக் காட்டி, “லுக் அட் திஸ்” என்றான் பெருமையாக.

சர்வர் ஷண நேரம் தாமதிக்காமல் நாலு விரலையும் சேர்த்து ”டப்” என்று அந்த எறும்பை அடித்தார். அது நசுங்கி செத்துப் போனது

நன்றி ; mowleeswaran

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (6-Mar-15, 12:14 pm)
பார்வை : 161

மேலே