தனிமையில் காதல்

மலை உச்சியில்,
குன்றுகளுக்கு நடுவில்,
மனம் விரும்பும் இடம்.

என் தலைகோதும் காற்று,
என் நினைவிற்கு தாளமிடும்
பறவைகள்.
அதற்கேற்ப தலையசைக்கும்
மரங்கள்.
என் மனதை திரையிடும்
மேகங்கள்.

தூரத்து அருவிச்சாரலில்
தெரியும் என்னவள் முகம்!
அது கண்டு பிரகாசிக்கும்
என் முகம்!
புன்னகைக்கும் உதடுகள்!
காற்றை விட வேகமாய்
தலைகோதும் என் கை.

அவளில்லாமல் அவளிடம்
பேசுவதும்,
சிரிப்பதும்,
எனை மறப்பதும்,
அவளுடன் உலகை வலம் வருதலும்,
அவள் எண்ணங்களோடு
வாழ்வதும்
வீழ்வதும் நடக்கும்.!

தனிமை.
தனிமை.
தனிமையில் காதல்.!!!!!

எழுதியவர் : கிருஷ்ணா (7-Mar-15, 12:30 am)
Tanglish : thanimayil kaadhal
பார்வை : 207

மேலே