எங்கே எங்கே எங்கே இயற்க்கை எங்கே

தென்னை ஓலை விசிறி எங்கே ?பனை ஓலை விசிறி எங்கே ?
பல்லாங்குழி எங்கே? கிச்சு கிச்சு தாம்பாளம் எங்கே?
தெல்லு விளையாட்டு எங்கே ? கோபிபிஸ் விளையாட்டு எங்கே?
சாக்கு பந்தயம் எங்கே? கில்லி எங்கே?
கும்மி எங்கே? கோலாட்டம் எங்கே?
திருடன் போலீஸ் எங்கே? ஆலமர விழுது ஊஞ்சல் எங்கே?
மரப்பாச்சி கல்யாணம் எங்கே? ஊனாங்கொடி ரயில் எங்கே?
கமர்கட் மிட்டாய் எங்கே? குச்சி மிட்டாய் எங்கே?
குருவி ரொட்டி எங்கே? இஞ்சி மரப்பா எங்கே?
கோலிகுண்டு எங்கே? கோலிசோடா எங்கே?
பல் துலக்க ஆலங்குச்சி எங்கே? கரிப்பழம் எங்கே?
கள்ளிப்பழம் எங்கே? இளுவான் எங்கே?
இலந்தைப்பழம் எங்கே? சீம்பால் எங்கே?
ரோஷம் வளர்த்த கொங்க மாட்டுப்பால் எங்கே?
பனம்பழம் எங்கே? சூரிபழம் எங்கே?
பழைய சோறு எங்கே? நுங்கு வண்டி எங்கே?
பூவரசம் பீப்பி எங்கே? கைகளில் சுற்றிய பம்பரங்கள் எங்கே?
நடைபழக்கிய நடை வண்டி எங்கே? அரைஜான் கயிறு எங்கே?
அன்பு எங்கே? பண்பு எங்கே? பாசம் எங்கே? நேசம் எங்கே?
மரியாதை எங்கே? மருதாணி எங்கே? மாட்டுவண்டி எங்கே?
கூட்டுவண்டி எங்கே? குதிரைவண்டி எங்கே?
ஆழ விழுத எருதுகள் எங்கே? செக்கிழுத்த காளைகள் எங்கே?
எருமை மாடுகள் எங்கே? பொதி சுமந்த கழுதைகள் எங்கே?
பொன்வண்டு எங்கே? சிட்டுக்குருவிகள் எங்கே?
குயில்பாடும் பாட்டு எங்கே? குரங்கு பெடல் எங்கே?
அரிக்கேன் விளக்கு எங்கே? விவசாயம் எங்கே?
விளைநிலங்கள் எங்கே? ஏர்கலப்பை எங்கே?
மண்வெட்டி எங்கே? மண்புழு எங்கே?
வெட்டுமன் சுமந்த பின்னல் கூடை எங்கே? பனைஓலை குடிசைகள் எங்கே?
தூக்கணாங்குருவி கூடுகள் எங்கே? குளங்களில் குளித்த கோவணங்கள் எங்கே?
அந்தக்குளங்களும் எங்கே? தேகம் வளர்த்த சிறுதானியங்கள் எங்கே?
அம்மிக்கல் எங்கே? ஆட்டுக்கல் எங்கே?
மோர் சிலுப்பி எங்கே? கால்கிலோ கடுக்கன் சுமந்த காதுகள் எங்கே?
நல்லது கேட்டது சுட்டிக்காட்டும் பெரியவர்கள் எங்கே?
வெற்றிலை பாக்கு பரிசங்கள் எங்கே? தோளிலும் இடுப்பிலும் சுமந்த பருத்தி துண்டு எங்கே?
பிள்ளைகளை சுமந்த அம்மாக்களும் எங்கே? தாய்ப்பாலை தரமாய் கொடுத்த தாய்மை எங்கே?
மங்கலங்கள் தந்த மஞ்சள் பை எங்கே? மாராப்பு சேலை அணிந்த பாட்டிகள் எங்கே?
இடுப்பைசுற்றி சொருகிய சுருக்கு பணப்பையும் எங்கே?
தாவணி அணிந்த இளசுகள் எங்கே? சுத்தமான நீரும் எங்கே?
மாசு இல்லாத காற்று எங்கே? நஞ்சில்லாத காய்கறி எங்கே?
பாரம்பரிய நெல் ரகங்களும் எங்கே?
எல்லாவற்றையும்விட நம்முன்னோர்கள் வாழ்ந்த முழு ஆயுள் நமக்கு எங்கே ?
இதற்க்கு பாமரனாலும் மெத்த படித்தவனாலும் விஞ்ஞானியாலும் ஏன் கணினியாலும் கூட பதில் சொல்லமுடியாது.
ஏனென்றால் நிம்மதியான வாழ்வை மறந்து பணம் எனும் காகிதத்தைதேடி இந்த உலகம் ஓடிக்கொண்டிருக்கிறது ...
அதுசரி..அடுத்த தலைமுறையைப்பற்றி சிந்திக்க நமக்கு நேரம்தான் எங்கே? எங்கே?? எங்கே???

எழுதியவர் : சமூன் அலி (25-Mar-15, 8:28 pm)
சேர்த்தது : சமூன் அலி
பார்வை : 2133

சிறந்த கட்டுரைகள்

மேலே