நினைவுகள்
நினைவுக் குறிப்புகள்
இதயம் எழுதும்
நெஞ்சின் வரலாறு
நினைவுகள் உள்ளே
பூக்கும் சிரிக்கும்
மீண்டும் மீண்டும் மலரும்
மலர மறப்பதில்லை
வாடுவதில்லை உதிர்வதில்லை
குறிஞ்சி போல் காத்திருக்கும்
உள்ளக் கதவை உரிமையுடன்
திறந்து எட்டிப் பார்க்கும்
இதயத்தின் இளவேனிற் சோலை
தனிமையின் மௌனகீதம்
கவின் சாரலன்